49
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இன்று 13 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புனே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு 11.10-க்கு மங்களூரிலிருந்து சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானம் புறப்படும் நேரத்தை அறிந்துகொண்டு பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடவேண்டும் என விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.