தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 90 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழக துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.