49
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் மாநாட்டின் போது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் தல 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
மேலும், குடும்ப சூழல் பொருத்து, சிலருக்கு கூடுதல் நிதி மற்றும் இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவும் த.வெ.க. ஏற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.